மீன்பிடி திருவிழாவில் உற்சாகம்!திண்டுக்கல், நத்தம் செங்குளம் கிராமத்தில் உள்ள சின்ன குளத்தில் நடந்த மீன்பிடித் திருவிழாவில், போட்டி போட்டுக்கொண்டு ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்களைப் பிடித்து சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூந்தன் குளம், வடக்கு கழுவூர் பறவைகள் சரணாலயப் பகுதிகளுக்கு மணிமுத்தாறு தண்ணீர் வராததால் குளங்கள் காய்ந்து கிடக்கின்றன உணவின்றி வெளிநாட்டு பறவைகள் பரிதாபமாக இறக்கின்றன...
தே.மு.தி.க விருப்பமனு விநியோகம் துவங்கிய நிலையில், விருப்பமனு வாங்குவதற்காக பேண்டு வாத்தியங்களுடன், குத்தாட்டம் போட்டபடி வந்த கட்சியினர். இடம் : கோயம்பேடு
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு தமிழக முதல்வரால் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக திறந்துவைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்.
வேடர் பரித் திருவிழாவை முன்னிட்டு சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக ராயபுரம் சென்ற உற்சவர் முத்துக்குமாரசாமி மயில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.