லோக்சபா தேர்தலையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில், ஆரணி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் தரணிவேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசார வாகனத்தில் இருந்த படி பேசினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..