ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோவிலில் பிரமாண்ட குண்டம் திருவிழா நடந்தது. தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரம் பேர் அதிகாலை 4 மணி முதல் குண்டம் இறங்கினர்.
புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான தாகூர் கல்லூரி மைதானத்தை மாநில பா.ஜ.,தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டனர்.
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வந்த எல் வடிவ மேம்பாலம் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இன்னும் சில வாரங்களில் திறக்கப்பட உள்ளது.இடம் : அடையாறு