பவானி ஆற்றில் திருப்பூர் நகராட்சி குடிநீர் திட்டம் நீரேற்று நிலையம் அருகே தண்ணீர் செல்லாமல் இருப்பதற்கு தடுப்பை ஏற்படுத்தி இருந்தனர். அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பின் தடுப்பு அகற்றப்பட்டது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.