திருவண்ணாமலை அடுத்த புதுமல்லவாடி பகுதியில் லோக்சபா தேர்தலையொட்டி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பில் தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் வாசகம் வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் மணல் சிற்பங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டார்.
கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்த தொகுதி வேட்பாளருமான வேலுமணியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி வழங்கப்பட்டது