திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கோவிலூர் பகுதியில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு அவசியம் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சீர்வரிசையுடன் மலைவாழ் மக்களை சந்தித்து விழிப்புணர் நோட்டீஸ் வழங்கினார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான பஹலகாமில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.