ஸ்ரீபெரும்புதூர் தொகுதி லோக்சபா தேர்தலின் ஓட்டுப்பதிவு எண்ணும் மையமான எம் ஐ டி கல்லூரி வளாகத்தை 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான கேமராக்கள் சரிபார்க்கும் பணியில் தேர்தல் பணியாளர்.
அ.திமு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பழனிசாமி, துணை தலைவர் முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வேலுமணி.
தினமலர் செய்தி எதிரொலியால் விருத்தாசலம் வயலூர் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள தடுப்பு பட்டைகள் அகற்றப்பட்டு புதிய பட்டைகள் பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது .
திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.