தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கட்சியின் சின்னம் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியல் பொருத்தும் பணி நடைபெற்றது அப்போது தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை தலையணையாக பயன்படுத்தி தூங்கினார்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு கால தாமதம் ஆவதால், அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பயன்பாட்டிற்கு வராமல் சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தென்படுகின்றன.