லோக்சபா தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் தேர்தல் அலுவலர் பூங்கொடி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காஞ்சிபுரம், வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கோ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவர் முருகன் ரத்தினாங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கூடலூர் கொளப்பள்ளி சின்ன ஆனைப்பள்ளம் டான் டீ தொழிலாளர்கள் குடியிருப்பு எதிரே, சுகமாக உறங்கிய கட்டை கொம்பன் யானை, வெயில் சூடேறியதால் மெதுவாக எழுந்து, சோம்பல் முறித்து அங்கிருந்து நகர்ந்தது.
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள எல்லை கருப்பராயன் கோவில் திருவிளக்கு பூஜையில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஜம்மு- காஷ்மீரின் ஸ்ரீநகரில் இலையுதிர் காலம் துவங்கி உள்ளது. மரங்களில் இருந்து உதிர்ந்த செம்மஞ்சள் நிற இலைகள் இடையே நடந்து சென்றவர்களுக்கு அழகிய சூழலை ஏற்படுத்தியது.
சீக்கிய சமயத்தின் நிறுவனர் குரு நானக் தேவ் ஜெயந்தியை முன்னிட்டு, பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் 'நகர் கீர்த்தன்' நிகழ்ச்சி நடந்தது. இதில் சீக்கியர்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற சிறுவர்கள், பக்தி பாடல்களை பாடினர்.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் தலைநகர் ரோமில், 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
சிதம்பரம் தில்லை கோவிந்த ராஜ பெருமாள் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. மூலவர் சன்னிதி கோபுர விமானத்தில் புனித நீர் ஊற்ற பக்தர்கள் கோவிந்தா நாமம் முழங்கினர்.