விவேக பாரதி அமைப்பு சார்பில் ராமநவமி விழா சென்னை, தி.நகரில் நடந்தது. இதில் விவேக பாரதி அமைப்பின் நிறுவன தலைவர் ஆர்.பி.எஸ்.மணியன் எழுதிய ராமாயணம் புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. மேடையில் இடமிருந்து - வலம் விவேக பாரதி அமைப்பின் செயலர் மங்கையர்க்கரசி, தர்ம ரக்க்ஷன சமிதி மாநில பொதுச்செயலர் கணபதி, வரலாற்று ஆய்வாளர் ஜயஸ்ரீ சாரநாதன், ஆடிட்டர் கைலாஷ்நாத் மற்றும் விவேக பாரதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திரமௌலி.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.