தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தத்திலிருந்து திருப்போரூர் மற்றும் மாமல்லபுரம் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய மக்கள், பேருந்துகள் அதிக அளவில் இல்லாத காரணத்தால் வருகின்ற பேருந்துகளில் தள்ளுமுள்ளு நடத்தி ஏறுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது .
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.