கோடையில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களுக்கு ஓ ஆர் எஸ் கரைசல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. திருப்பூர் மாநகராட்சியில் பல இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் ஓ ஆர் எஸ் கரைசல் வைக்கப்படவில்லை. இடம் நல்லூர் மண்டல அலுவலகம் முன்பு.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..