தமிழகத்தில் மீன் பிடி தடைக் காலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆழ்கடலுக்கு செல்லாமல் கரை ஓரங்களில் சிறிய படகுகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள்.இடம் : பெசன்ட் நகர்.
தமிழகத்தின் பழமையான கால வரலாற்றை பறைசாற்றும் வகையில் 56 கோடி ரூபாய் செலவில் திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அருகே கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை வரும் 21ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் நடந்த தெப்பத் திருவிழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் குளத்தை வலம் வந்த வடாரண்யேஸ்வரர்- வண்டார்குழலி அம்மன்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் பனிப்பொழிவு முழுவீச்சில் துவங்கியிருக்கிறது. பனி படர்ந்த மரங்கள், பாலங்கள் மற்றும் உறைந்த குளங்கள் என அதன் அழகை ரசித்து ஒருவர் படம்பிடிக்கிறார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் பனிப்பொழிவு முழுவீச்சில் துவங்கியிருக்கிறது. பனி படர்ந்த மரங்கள், பாலங்கள் மற்றும் உறைந்த குளங்கள் என அதன் அழகை ரசித்து ஒருவர் படம்பிடிக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, பக்தர்கள் கடலில் இறங்கி நீராட முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார கிராமங்களில் பசுமை மின்சாரம் உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சோலார் தகடுகள் கடல் போல் காட்சியளிக்கின்றது.