திருப்பூர், ஊத்துக்குளி ரோடு ஸ்ரீசண்முகதேவர் முத்தமாள் திருமண மண்டபத்தில் திருவருள் ஜோதிட நிலையம் 18வது சான்றளிப்பு விழாவில் ஒருவருக்கு காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் சான்றிதழ் வழங்கினார்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.