திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவையொட்டி, நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி, பொங்கல் வைத்து விழாவை துவக்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்ற தனியார் ஏ.சி., பஸ் இரவு 9.30 மணிக்கு 100 அடி ரோடு மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பஸ்சை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர்.
விண்ணில் தவழும் மேகங்கள் மண்ணிற்கு இடம்மாறியதோ என எண்ணும் வகையில், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நிலவி வரும் கடும் பனி மூட்டத்துக்கு இடையே கங்கை நதியின் மீதுள்ள பாலத்தில் ஊர்ந்து சென்ற ரயில்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த உங்கள் ராணுவத்தை அறிந்து கொள்ளுங்கள் கண்காட்சியின் போது, போர் மற்றும் தற்காப்பு கலைத் திறன்களை நம் ராணுவ வீரர்கள் வெளிப்படுத்தினர். அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளின் அணிவகுப்பு பொது மக்களைக் கவர்ந்தது.
அரசாணைப்படி அலுவலகங்களில் அண்ணா மற்றும் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் படத்தை வைக்கக் கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்.