புதுச்சேரி குபேரர் சிலை எதிரே நோ பார்க்கில் காரை நிறுத்திய போதை வாலிபர்கள் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீசை தள்ளிவிட்டு ரகளை ஈடுபட்டனர் பெரிய கடை போலீசார் பெண் போலீஸ் அர்ச்சனாவை மீட்டு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி வைகுண்டவாச பெருமாள் சீனிவாச அலங்காரத்தில் சகஸ்ரதீப ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி