கோவை காந்திபுரம் அலன் இன்ஸ்டிட்யூட்டில் பயின்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் ஆலன் கோவை மற்றும் புதுச்சேரி தலைவர் சவுரப் திவாரி மற்றும் கோவை வளாகத் தலைவர் வைபவ் திவாரி மாணவர்களை கௌரவித்தனர்.
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.