தினமலர் மற்றும் சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து இன்ஜினியரிங் கவுன்சிலிங் 2024 நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது. இதில் (இடமிருந்து) சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ், அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன், ஸ்ரீ ஈஸ்வர் தொழில்நுட்ப கல்லூரி இயக்குனர் ராஜாராம், கற்பகம் குழுமத்தின் பிராண்டிங் மற்றும் சேர்க்கை பிரிவு நிர்வாகி சுப்புராஜ், கற்பகம் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் ஆதி பாண்டியன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.