கொங்கு நாடு மனநிலை அறக்கட்டளை சார்பில், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக நடந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இடம்: கோவை நேரு ஸ்டேடியம்.
விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் தக்காளி செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பழங்கள் தரம் பிரித்து பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இடம். உடுமலை.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.