விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க கட்சி சார்பில் மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்காக புனிதமான வன்னி மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து, பிஷ்னோய் சமூகத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வன்னி மரத்தைப் பாதுகாப்போம் என ஹிந்தியில் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள லேண்டிங் பிரிட்ஜஸ் பகுதியில் ஆற்றில் மிதந்து வரும் ராட்சத பனிப்பாறைகளுக்கு இடையே சிக்கியுள்ள உல்லாச கப்பல்கள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, விரதம் இருந்த பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.