ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட 391 வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து துறைச் செயலர் ககன் தீப்சிங் பேடி, அமைச்சர் பெரியசாமி, ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பொன்னையா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.