தள்ளு,தள்ளு, தள்ளு:மானாமதுரையில் இருந்து சிவகங்கை வந்த அரசு பஸ் மன்னர் துரைசிங்கம் கல்லூரி அருகே வந்தவுடன் வேகத்தடையில் ஏறி இறங்கியதும் பேருந்து ஆப் ஆகி நின்றது பிறகு எடுக்க முடியாமல் அங்கிருந்தவர்கள் தள்ளிவிட பஸ் கிளம்பியது.
விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் தக்காளி செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பழங்கள் தரம் பிரித்து பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இடம். உடுமலை.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.