காரமடை ஒன்றியம் இலுப்பநத்தம் ஊராட்சி ராசடியில் அமைத்துள்ள மரகத பூங்கா திறக்கப்பட்டது. இதில் உள்ள நடை பயிற்சி மேற்கொள்ளும் நடைபாதையில் ஊராட்சி தலைவர் ரங்கசாமி, வன சரக அலுவலர் ரும்யா, வனவர் ராதாகிருஷ்ணன் பள்ளி பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் நடந்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.