திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, கிரிவலப் பாதையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிட்டார். உடன் டி.ஆர்.ஓ., ராம் பிரதீபன், கோவில் இணை ஆணையர் ஜோதி உட்பட பலர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.