விழுப்புரம், மயிலம் ஒன்றியம் சின்ன நெற்குணம் கிராமத்தில் ஏரியை ரு. 13 ஆயிரத்துக்கு ஏலம் விட்ட திண்டிவனம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஊசுடேரியில் மீன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய பெலிக்கான் பறவையை மீட்ட வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
நிலையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்கத்தினர் எழும்பூர் பகுதியில் பேரணியாக சென்றனர்.
துப்புரவு பணியாளர்கள் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார்.
துப்புரவு பணியாளர்கள் சென்னை ராஜாஜி சாலையில் தலைமைச் செயலகம் முன்பு, மற்றும் மெரினா காமராஜர் சாலையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள முத்துசாமி பாலத்தில் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்.
துப்புரவு பணியாளர்கள் சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இடம்: மெரினா காமராஜர் சாலை கருணாநிதி நினைவிடம் முன்பு.