சபாஷ் பயணிகளே...நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில் தொட்டபெட்டா டீகார்டன் அருகே கோத்தகிரி சாலையில் விழுந்த மரத்தை பஸ்களில் சென்ற பயணிகளே அகற்றியதால் உடனடியாக போக்குவரத்து சீரானது.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மின்னும் வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்ட சரிபார்க்கும் பணியினை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலம் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ள நிலையில், பொதுமக்கள் தாங்களாகவே மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கவர்னர் ரவி கொடி அசைத்து துவக்கி வைத்தார்
பூத்துக்குலுங்கும் பூக்களுக்கு நடுவே மாணவர்கள்...கோவை காந்திபுரத்திலுள்ள செம்மொழி பூங்காவிற்கு வந்த பள்ளி மாணவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பூக்களை பார்த்து ரசித்தனர்.
சிலையாய் நீ சிற்பியாய் நான் என்று வர்ணிக்கலாம் இனி... கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவில் வைத்துள்ள சிற்பத்துடன் தன் மனைவியை புகைப்படம் எடுத்த வாலிபர்.
மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மழை காலத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் கொசு உற்பத்தி குறித்து ஆய்வு நடத்தினர். இடம் :மீனம்பாக்கம்.