செய்தி எதிரொலி நமது நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து பக்கிங்காம் கால்வாய் முழுவதும் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டுள்ளது.இடம் : சோழிங்கநல்லூர், சென்னை.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.