வட மாநிலத்தவர்கள் துர்கா பூஜையில் வைத்து வழிபாடு நடத்துவதற்கான துர்கா சிலைகளை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது. இடம் தி.நகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா வளாகத்தில்.
காஷ்மீரில் பனிமழை பொழிந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் கவ்ரான் கிராமத்தில் பனிக்குவியல்கள் மீது சறுக்கி விளையாடிய சிறுவர் - சிறுமியர்.
தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற மரத்தினால் ஆன சைக்கிளுடன் நிற்கும் சிறுவன்.
திருவள்ளூர் ஜே என் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் வெளியே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவை மீறி ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு