கோவை மாவட்டம், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சனிப் பிரதோஷத்தையொட்டி, சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு, கன்றுடன் கூடிய பசுமாட்டை தானம் கொடுத்தார். தொடர்ந்து, உற்சவர் பல்லக்கை தூக்கி கோவிலை சுற்றி வலம் வந்தார்.
கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் த.வெ.க.,தலைவர் விஜய் பங்கேற்க உள்ள பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி.தமிழ்இனியன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அ.திமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்சுக்கு, நினைவுப் பரிசை வழங்கிய வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆர். விஜயகுமார். இடம்: வில்லிவாக்கம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.