வயநாட்டில் நிலச்சரிவில் இருந்து தப்பித்து காட்டிற்குள் தஞ்சம் அடைந்த பாட்டி மற்றும் சிறுமியை யானை காப்பாற்றிய சம்பவத்தை உணர்த்தும் வகையில் யானை மற்றும் பாட்டி, குழந்தை சிலையுடன் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை.இடம் : கீழ்கட்டளை.
அ.திமு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பழனிசாமி, துணை தலைவர் முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வேலுமணி.
தினமலர் செய்தி எதிரொலியால் விருத்தாசலம் வயலூர் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள தடுப்பு பட்டைகள் அகற்றப்பட்டு புதிய பட்டைகள் பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது .
திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.