உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடந்த பேரணியில் கல்கி திரைபடத்தில் வந்த வாகனத்தில் போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் அமர்ந்து பார்வையிட்டார். அருகில் கலெக்டர் கிராந்தி குமார் உள்ளிட்டோர்.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.