கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு மழை பெய்துள்ளது அதன் எதிரொலியால் முந்திரி விளைச்சலில் பூ பூத்து குலுங்குகிறது. இடம் : குள்ளஞ்சாவடி சாமுட்டி குப்பம்.
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் தங்கள் சேலையால் வாய்களை மூடிக்கொண்டனர்.
திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் முன் உதவித்தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.