விழுப்புரம் அடுத்த எருமனந்தாங்கல் ஏரி நீரும் காக்குப்பம் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலைய கழிவு நீரும் அதிகமாக திறந்து விடப்பட்டதால் டாக்டர்ஸ் வில்லேஜ் நகர் பகுதியில் கழிவுநீர் வீடுகளை சுற்றி சூழ்ந்துள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.