தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து நேர்மையான அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததையொட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு பேச்சுவார்த்தை நடத்தினார்.
லாவண்யா வேணுகோபால் இயக்கி நடித்த மறைந்த இசை கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு குறித்த, காற்றினிலே வரும் கீதம் நாடகம் நடந்தது. இடம் : ஆர் ஆர் சபா, மயிலாப்பூர்.
கோடை வெயிலில் வெப்பத்தை தீர்க்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்