சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து, ஊட்டி அரசு மருத்துவமனையில், தமிழக அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழக மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.