சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சார்பில் கண்களில் கருப்பு துணிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடம். காமராஜர் சாலை, சென்னை.
சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்ட முடிவு செய்த போது எத்தனையோ போராட்டங்கள், ஒரு வழியாக மரங்களை பாதுகாக்கும் கோரிக்கையே வென்றது. இந்த சாலையை சூழ்ந்த மரங்கள் மனதுக்கு இதமாக காட்சியளிக்கின்றன. இடம்: பொள்ளாச்சி- ஆனைமலை ரோடு.