கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார் நன்கொடை வழங்கினார். அருகில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலர் ரூபா சுப்புலட்சுமி உள்ளிட்டோர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்.
சட்டசபை தேர்தலில் வரும் ஏப்ரல் 23ல் வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர், தங்கள் முகத்தில் வண்ண ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள். இடம்: குவஹாத்தி.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி இளங்காக்கூரில் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாதது குறித்து கிராமத்தினர் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.