திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது பிசான பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. பச்சை பசேலென ரம்மியமான வயல் சூழ்ந்த விவசாயக் கிணற்றில் அரையாண்டு தேர்வு விடுமுறையை குதூகலமாக கழிக்கும் சிறுவர்கள்.இடம்: பாலாமடை.
கிறிஸ்துவர்கள் தங்கள் முன்னோரை நினைவு கூரும் வகையிலான கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில், தங்கள் முன்னோர் மற்றும் உறவினர்களின் கல்லறையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய கிறிஸ்துவர்கள்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், நடப்பாண்டுக்கான பிரமாண்ட சைக்கிள் நடந்தது. உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த போட்டியில் 40,327 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.