உழைப்புக்கு பயன் உண்டு ! ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனாமல்லூர் மந்தல் , வனுக்கூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஷே க் அலிஷா என்பவர் மொபைல் டெய்லரிங் தொழில் நடத்தி வாழ்வை கழித்து வருகிறார். இவருக்கு நாள்தோறும் நல்ல வருமானம் கிடைப்பதாக அவர் சொல்கிறார்.
சென்னையில் இரண்டு நாட்களாக வெயில் அதிகமாக காணப்படுவதால் அலுவலகங்களுக்கு கையில் குடையுடனும்,முகத்தை மூடியபடியும் செல்லும் பொதுமக்கள்.இடம் : திருவான்மியூர்
சென்னை தரமணி 100 அடி சாலையில் உள்ள நடை மேம்பாலத்தில் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்த நகரும் மின் படிக்கட்டுகள் அகற்றப்பட்டு நடைபாதையில் போடப்பட்டுள்ளது இதனால் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்
காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே 2வது நாளாக சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரோடு மறியல் நடந்தது.