சென்னை கடற்கரை முதல் தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, குறைந்த அளவில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கூட்டம் அலைமோதியது. இடம்: பூங்கா ரயில் நிலையம்.
நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வாங்கும் முயற்சிக்காக மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதன் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து கிடக்கிறது.இடம் : திருவான்மியூர்
அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்