இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150வது ஆண்டு விழா சென்னை, கொளத்தூர் எவர்வின் பள்ளி வளாகத்தில் நடந்தது. அதில் வைக்கப்பட்ட கண்காட்சியில், மழையை அளவீடு செய்யும் கருவி பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் மாணவியருக்கு விளக்கினார்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.