விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாக முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள். இடம்: திருவொற்றியூர் குப்பம்.
தென் மாநிலங்களில் மிக முக்கியமானதும் 105 அடி உயரம் கொண்டதுமான ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 59 அடியாக சரிந்துள்ளது. நீர்மட்டம் அதிகமாக இருக்கும்போதெல்லாம் மூழ்கிக் காணப்படும், டணாய்க்கன் கோட்டை தற்போது வெளியே தெரிகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி விழும் பாறையில் தொன்மையான சிவலிங்க சிலைகள் இருக்கின்றன. இங்கு நடந்து வந்த மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த தற்போது மீண்டும் நடக்கின்றன.