போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சார்பில் மாநிலம் முழுதும் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. இடம்: சென்னை பிராட்வே பேருந்து நிலையம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.