போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சார்பில் நடந்த மாநிலம் முழுதும் சிறை நிரப்பும் போராட்டத்தால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன.இடம்: சென்னை பிராட்வே பேருந்து நிலையம்.
சென்னை வில்லிவாக்கம் ஏரியில், கட்டப்பட்டு வரும் பசுமை பூங்காவின் முக்கிய அம்சமான கண்ணாடி பாலம் பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.
சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் அருகே வடக்கு நிழற்சாலையின் இருபுறமும் பஸ்கள், வேன்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 80 அடி சாலை 40 அடி சாலையாக குறுகியுள்ளது.