புதுச்சேரி நள்ளிரவில் அனாவசியமாக திரிவதும் லைசென்ஸ் இல்லாமல் சுற்றுவதை தடுக்க ராஜீவ் காந்தி சிக்னலில் சீனியர் எஸ் பி பிரவீன் குமார் திரிபாதி தலைமையில் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தினர்.
காஞ்சிபுரம், வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கோ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவர் முருகன் ரத்தினாங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கூடலூர் கொளப்பள்ளி சின்ன ஆனைப்பள்ளம் டான் டீ தொழிலாளர்கள் குடியிருப்பு எதிரே, சுகமாக உறங்கிய கட்டை கொம்பன் யானை, வெயில் சூடேறியதால் மெதுவாக எழுந்து, சோம்பல் முறித்து அங்கிருந்து நகர்ந்தது.
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள எல்லை கருப்பராயன் கோவில் திருவிளக்கு பூஜையில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஜம்மு- காஷ்மீரின் ஸ்ரீநகரில் இலையுதிர் காலம் துவங்கி உள்ளது. மரங்களில் இருந்து உதிர்ந்த செம்மஞ்சள் நிற இலைகள் இடையே நடந்து சென்றவர்களுக்கு அழகிய சூழலை ஏற்படுத்தியது.