சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கத்தின், தமிழக கிளை வளாகத்தில் கவர்னர் ரவி, ஜெனிவா கன்வென்ஸன் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
கிறிஸ்துவர்கள் தங்கள் முன்னோரை நினைவு கூரும் வகையிலான கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில், தங்கள் முன்னோர் மற்றும் உறவினர்களின் கல்லறையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய கிறிஸ்துவர்கள்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், நடப்பாண்டுக்கான பிரமாண்ட சைக்கிள் நடந்தது. உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த போட்டியில் 40,327 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் நாற்று நடுவதற்காக தனது உழுத வயலை மாடுகளில் கட்டிய மட்டப் பலகை உதவியுடன் பாரம்பரிய முறைப்படி பரம்படிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி...