ஊட்டியில், நீலகிரி சிவில் என்ஜினியர்ஸ் சங்கத்தினர், நீலகிரியில் மட்டும் கட்டட அனுமதியை தொடர்ந்து நிராகரித்து வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, மண் சோறு சாப்பிடும் போராட்டம் நடத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..