பாலைவனத்தில் மரங்களை பார்க்க முடியாது என்பதால் தற்போதே இலைகளை தின்று தன் பசியை போக்கிக் கொள்கிறதோ இந்த ஒட்டகம்!. தென்காசி மாவட்டம் கல்லூரணி பகுதியில் சர்க்கஸ் போடுவதற்காக அழைத்து வரப்பட்ட ஒட்டகம் புளிய மரத்தின் இலைகளைக் தின்று பசியை போக்கிகொள்கின்றது.
கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் த.வெ.க.,தலைவர் விஜய் பங்கேற்க உள்ள பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி.தமிழ்இனியன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அ.திமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்சுக்கு, நினைவுப் பரிசை வழங்கிய வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆர். விஜயகுமார். இடம்: வில்லிவாக்கம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.