மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள்.
ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் ஓடும் தாவி ஆற்றின் அருகே அமைக்கப்பட்டு உள்ள தேனீ வளர்ப்பு மையத்தில், பெண் தொழிலாளர் ஒருவர் தேனீப் பெட்டிகளை ஆய்வு செய்தார். இப்பகுதியில் நிலவும் இதமான தட்பவெப்பநிலை மற்றும் பூத்துக் குலுங்கும் மலர்களால் தேன் உற்பத்தி அதிகரித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள்.இடம் : ஆழ்வார்பேட்டை
சென்னை எலியட்ஸ் கடற்கரையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வகையில் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து வைக்கப்பட்டுள்ள மின்சார சார்ஜிங் நிலையம்.இடம் : பெசன்ட் நகர்
மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றி பேனர்கள் வைத்துள்ளனர்...