ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில், ஆசிரியர்கள் , தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி , பள்ளிக்கு தலைவராக உள்ள கலெக்டர் லட்சுமி பவ்யா மற்றும் நிர்வாக குழுவை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.